வவுனியாவில் இயங்கி வந்த முன்னணி சைவ உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரில் இயங்கி வந்த முன்னணி சைவ உணவகங்கள் மூன்று இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் உட்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றபோதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது . இதனால் மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
உணவகங்களில் எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகங்களை மூடவேண்டிய நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா